tamilnadu

img

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு: இரு தரப்பும் கோட்டாட்சியரிடம் நேரில் விளக்கம்

விழுப்புரம், ஜூன் 9- விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, இரு தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி எழுத்துப் பூர்வ மான விளக்கங்களை அளித்தனர். மேல்பாதி கிராமத்தில் பழை மைவாய்ந்த  திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. மேலும், தலித் சமூகத்தை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு செல்ல முயன்றபோது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தின. இத னால், இரு தரப்பு மக்களிடையே பிரச்சனை உருவானது.  இதுகுறித்து இருதரப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தொடர்ந்து,கோயிலில் வழிபாடுகளை மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்  டும் எனக் கூறி, தலித் சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் தீர்வு காணப்பட வில்லை.  இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், வருவாய்க் கோட்டாட்சிய ரும் உள்கோட்ட நடுவருமான ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் புதனன்று  (ஜூன் 7) திரௌபதி அம்மன் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்த னர்.

இது தொடர்பான அறிவிப்பும் கோயிலில் விளம்பரம் செய்யப் பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர் கள் பாதுகாப்பு கோயிலுக்குப் போடப்பட்டது . இதன் தொடர் நடவடிக்கை யாக விழுப்புரம் உட்கோட்ட நடு வரும், வருவாய் கோட்டாட்சிய ருமான ச. ரவிச்சந்திரன் இரு  தரப்பைச் சேர்ந்த 82 பேர்களுக்கு  சம்மன் அனுப்பி, ஜூன் 9 ஆம் தேதி  நேரில் ஆஜராகி உரிய விளக்கங் களை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என உத்தரவுப் பிறப்பித்திருந்தார். இந்நிலையில், விழுப்புரம் வரு வாய் கோட்டாட்சியர் அழைப்பின் பேரில் இரு தரப்பினரும் தனித்தனியாக வெள்ளிக்கிழமை வருவாய் கோட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் முன்பு ஆஜராகி எழுத்துப் பூர்வ மான விளக்கங்களை அளித்த னர். இரு தரப்பினரின் வாதங்க ளையும் கேட்டறிந்த வருவாய்  கோட்டாட்சியர் கோயில் பிரச்சனை யில் தீர்வு எட்டப்படும் வரை அமைதிக் காக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விழுப்புரம் உட்கோட்டக்காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சுமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர். இந்த முறையும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தேதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் மறு விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சம்மந்தப்பட்ட அதி காரிகள் தெரிவித்தனர். அது வரைக்கும் கோவிலுக்கு போடப் பட்டுள்ள காவல் பாதுகாப்பு தொடரும் என்று கூறப்படுகிறது.