வேலூர், டிச.13- கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. டெல்டா, டெல்டாபிளஸ் என பல வகைகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் இன்று வரை 38 பேருக்கு ஒமைக் ்ரான் பரவியுள்ளது. தடுப்பூசி இதனை கட்டுப்ப டுத்துமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதி யாக சில மாற்றங்கள் செய்து அதனைமனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக் ்கப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவ குழுவினர் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். கோவிஷீல்டு கோவேக் க்சின் 2 தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த 2 தடுப்பூசிகளின் எதிர்ப்புசக்தி குறித்தும் ஏற்கனவே தடுப்பூசி போட்டு அவர்க ளுக்கு பூஸ்டர் 3-வது தடுப்பூசி தேவையா என்பது குறித்து வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் ககன்தீப் கங் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 200 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக் ்கப்பட்டுள்ளனர். மேலும் கோவேக்சின்தடுப்பூசி செலுத்திய தன்னார்வலர்கள் 200 பேர் தேவைப்ப டுகின்றனர். இதுபற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தன்னார்வலர்கள் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் ஆரா ்ய்ச்சிக்கு ஒத்துழைத்தால் போதும் என தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் தொடர்பாக வேலூர் சி.எம்.சி. பேராசிரியர் மருத்துவர் ககன்தீப் கங் மேலும் கூறியதவது:-
ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்பது நமக்குத் தெரியாது, ஃபைசர் தடுப்பூசி 2 தவணைகள் எடுத்துக் கொண்ட வர்களுக்கு ஆன்ட்டிபாடியை நியூட்ரலைஸ் செய்வதற்கான தன்மை 40 விழுக்காடு குறைவாக உள்ளது. ஏனைய தடுப்பூசிகளின் செயல்பாடுகளிலும் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் இவை அனைத்தும் ஆய்வக தரவுகள்தான். இந்த தொற்று, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களைத் தாக்கும்போதுதான் தடுப்பூசியின் முழுமை யான செயல்பாடுகள் தெரியவரும். ஒமைக்ரான் தொற்று விகிதம் மிக அதிகம், இது டெல்டா வகை தொற்றைவிட அதிகமாக இருக்கும்.இத்தொற்று எதிர்ப்புச் சக்தியை உடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாலும் பரவக்கூ டிய தன்மை அதிகம் உள்ளதாலும் தொற்று விகிதம் அதிகமாகவுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும், ஏற்கனவே பாதிக்கப் ்பட்டவர்களையும் மீண்டும் அதிகளவில் தாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிப்பதன் மூலம் தொற்றுப் பரவலை காலதாமதப்படுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. வெளிநாட்டு பயணிகளின் பயணத்திற்கு முந்தைய மற்றும் பயணத்திற்குப் பிந்தைய சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைவான ஆக்சிஜன் தேவைகளை கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது. முதியவர்கள், துணை நோய்த்தொ ற்றுகள் உள்ளவர்கள் ஆரம்பகால பூஸ்டர்களால் பயனடைவார்கள். மேலும் இளைய வர்கள் இந்த நோய் தாக்கத்தைச் சமாளித் ்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.