tamilnadu

img

தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

நூல் உரிமைத் தொகையை வழங்கினார் முதலமைச்சர்!

சென்னை, மே 5- தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத் துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா  கொண்டாடப்படும் எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்று வோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சி கள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, இவ்விழாவை சிறப் பாக நடத்திட தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித் துறையால் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இவ் விழாவை நடத்தின. ஏற்கனவே, தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப் பன், விடுதலை ராஜேந்திரன், பேரா சிரியர் இரா.குமரவேலன், மம்மது  உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு, அதற்கான நூலு ரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோர் நூல்கள்  நாட்டுடமையாக்கப்பட்டு மரபுரிமை யினருக்கும், கொ.மா.கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன்  ஆகியோர்களின் நூல்கள் நாட்டு டைமை செய்து, அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதி தாசனின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார். விழாவில் பல்லவி இசைக்குழு வினரின் ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, திரு நரேந்திர குமார்  நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது-நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமை யில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா! சமூக உணர்வா!’ என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. முன்னதாக, முதலமைச்சர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் “தமிழ் அமுது” நடன நிகழ்ச்சியும், அனர்த்தனா குழு வினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும்  நடன நிகழ்ச்சியும், தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த குறும் படத்தையும் பார்வையிட்டார்.