tamilnadu

img

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு ஜாமீன்!

மும்பை, நவ. 18 - பீமா கோரேகான் - எல்கர் பரிஷத் வழக்கில், ஐஐடி பேராசிரியரும்- டாக்டர் அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை நிராகரித்ததை எதிர்த்து  2021-இல் டெல்டும்டே தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் ஏ.எஸ். கட்கரி மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகி யோர் அடங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு ஜாமீன் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில், ஆனந்த் டெல்டும்டே 2019 பிப்ரவரி முதல் மூன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்த நிலையில், அவர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act - UAPA) பிரிவு 13, பயங்கர வாதச் செயல்கள் தடுப்புப் பிரிவு 16,  சதிச்செயலுக்கான பிரிவு 18 ஆகிய வற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள என்ஐஏ (National Investigation Agency - NIA) குற்றச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க  ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரே கானில் நடைபெற்ற போரில் மராத்திய பேஷ்வா படைகளை வெற்றிகொண்ட தன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழா விற்குள் புகுந்த சாதி ஆதிக்கவெறியர் கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறை யைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்த னர். அன்றைய ஆளும் மாநில பாஜக அரசு, சாதி வெறியர்களை கைது செய்யா மல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, பாதிரியார் ஸ்டான் சுவாமி, சுதா பரத் வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட 9 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு உட்பட பல பொய் வழக்குகளை பதிவு செய்தது. அதாவது, பீமா கோரேகான் கொண்டாட்டத்திற்கு முதல் நாள், 2017 டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத் மாநாட்டில், மேற்கண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள் காரணமாகவே, பீமா கோரேகானில் வன்முறை தூண்டிவிடப்பட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவோயிஸ்டுகளின் தொடர்பு  உள்ளதாக கூறி வழக்கு தேசிய புலனாய்வு  முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பிரதமர் மோடி யை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக புதிய குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டன.  கைது செய்யப்பட்டவர்களில் பாதிரி யார் ஸ்டான் சுவாமி தனது 83 வயதில் ஜாமீனே கிடைக்காமல் சிறையிலேயே 2021-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். சுதா பரத்வாஜூக்கு கடந்த 2021 டிசம்பரில் ஜாமீன் கிடைத்தது. கடந்த 82 வயதான கவிஞர் வரவர ராவிற்கு 2022  ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் காரணங் களுக்காக 6 மாத நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா, புற்றுநோய் பரிசோதனைக்காக கடந்த வாரம் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து, மூன்றரை ஆண்டு களாக சிறையில் இருந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவிற்கு, மும்பை உயர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரம், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை, உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக கூறியுள்ள மும்பை உயர்  நீதிமன்றம், அதுவரை ஆனந்த் டெல்டும்டேவின் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, டாக்டர் அம்பேத்கரின் பேத்தியான ரமாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.