வெடிகுண்டு மிரட்டல் புதுச்சேரி:
புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக நலத்துறை எச்சரிக்கை
சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தை கள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ‘பிங்க்’ ஆட்டோக்கள் எனப்படும் இளஞ்சிவப்பு ஆட்டோக் களை தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டோக் களை ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவ தாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து பிங்க் ஆட்டோக் களை பெண்கள்தான் ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக்
சென்னை: பாஜக நிர்வாகியும், திரைக் கலைஞ ருமான குஷ்புவின் எக்ஸ் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. “எனது எக்ஸ் பக்கத்தில் நுழைய முயற்சித்தேன். ஆனால், யாரோ புது மெயில் ஐடி பயன்படுத்தி லாகின் செய்ததாக மெசேஜ் வந்தது. மர்ம நபர்கள் புது ஐடி போட்டு எனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துள்ள னர். இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறேன். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் ஹேக்கர்கள் எப்போதும் நமக்கு ஒரு படி முன்னாடி தான் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
துரை.வைகோ விலகல்
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று துரை வைகோ எம்.பி., அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், பல்வேறு அரசியல் விவகாரங்களையும், தனது செயல்பாடுகளையும் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலும், கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக் கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சி யின் ‘முதன்மை செயலாளர்’ என்ற தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்ப வில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மகப்பேறு கால உயிரிழப்புகள் 39 ஆக குறைந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் பிரச வங்கள் நடைபெறுகின்றன. மகப்பேறு கால உயிரிழப்புகள் 45-இல் இருந்து, 39 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாட்களுக் குள்ளும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கர்ப்பிணிகளுக்கு தீவிர சிகிச்சையுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியல், அவர்களின் பிரசவ காலத்திற்கு ஓரிரு மாதத்துக்கு முன் வழங்கப்படுகிறது. அந்தந்த கிராமப்புற செவிலியர்கள் வாயிலாக, அவ்வப்போது கர்ப்பிணியர்களும் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் கர்ப்ப கால உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.