tamilnadu

img

தரங்கம்பாடி கடலில் படகுகள் மோதி விபத்து: நீந்தி கரைக்கு வந்த மீனவர்கள்

மயிலாடுதுறை, ஜன.31- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடலில் இரண்டு மீன்பிடி பைபர் படகுகள் மோதி விபத்து ஏற்பட்டு படகுகள் கவிழ்ந்த தால் கடலில் விழுந்த மீனவர்கள் நீந்திய வாறு கரை சேர்ந்தனர். தரங்கம்பாடி பகுதியில் சுமார் 8 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகு, பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றனர்.  இந்நிலையில் சனிக்கிழமை காலை  திருவாணன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இரு வரின் பைபர் படகுகள் மீன்பிடித்து கரைக்கு  திரும்பிக் கொண்டிருந்தன. தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும்  மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தின் அருகே வரும்போது இரண்டு படகுகளும் நிலைதடுமாறி ஒன்றோடு ஒன்று மோதியதில் கவிழ்ந்தன. இதனால் இரு படகுகளிலும் சென்ற மீனவர்கள் சிறு காயங்களுடன் நீந்தியவாறு கரை வந்து சேர்ந்தனர்.  இதனைக் கண்ட சகமீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் கவிழ்ந்த படகுகளை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.   மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரம் சரியான அளவில் இல்லை. இதன் காரண மாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன் பிடிக்கச் செல்லும் மற்றும் திரும்பும் படகுகள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரி விக்கின்றனர். முகத்துவாரத்தில் தேவை யான சீரமைப்பை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.