tamilnadu

img

உதகை வந்த ஆளுநரே, திரும்பிப் போ!

உதகமண்டலம், மார்ச் 10- ‘‘உதகை வந்த ஆளுநரே திரும்பிப் போ’’ என்கிற ஆவேச முழக்கங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உதக மண்டலத்தில் இடதுசாரிக் கட்சியினர் வெள்ளி யன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அண்மையில் ஆளுநர் ரவி, மார்க்சியம் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு இடது சாரிக் கட்சிகள் எதிர்வினையாற்றி வரு கின்றன.  இந்நிலையில், 5 நாள் சுற்றுப் பயணமாக உதகை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து, உதகை ஆளுநர் மாளிகை முன்பு  உள்ள அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைதுசெய்தனர்.  முன்னதாக போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கூறுகையில், மார்க்சியத்தை அவதூறாக பேசிய ஆளுநர் ரவி எங்கே சென்றாலும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் நவீன் தலைமை ஏற்றார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் போஜராஜ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எல்.சங்கர லிங்கம், சி.வினோத் மற்றும் கோத்தகிரி தாலுகா செயலாளர் வி.மணிகண்டன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.