ஒன்றிய அமைச்சருக்கு கருப்புக்கொடி!
சென்னை, பிப். 28 - ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சருக்கு சுகந்த மஜூம்தாருக்கு கருப்புக் கொடி காட்டி வெள்ளியன்று (பிப்.28) சென்னையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்தியை திணிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொண் டால் தான் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமி ழகத்திற்கு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு மிரட்டல் இறங்கியுள்ளது. இதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை ஐஐடி-யில் நடை பெற்ற விழாவில் பங்கேற் பதற்காக ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் சுகந்த மஜூம்தார் வெள்ளிக் கிழமையன்று சென்னை வந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அர சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. மறியலிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். திமுக மாணவரணி செய லாளர் சி.வி.எம்.பி. எழி லரசன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த்சாமி மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.
இன்று மாணவர் சேர்க்கை
சென்னை, பிப். 28- அரசுப் பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1 அன்று தொடங்குகிறது. அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளி களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும் மார்ச் முதலே மாணவர் சேர்க்கை யை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப் பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.