பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத் தில் அவருடைய சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஞாயிறன்று மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அப் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெல்லைச் சீமையில் நடை பெற்ற விடுதலைப் போராட்டத்தில் முக் கிய தளபதியாக களத்தில் நின்றவர் ஒண்டி வீரன். நீட் விலக்கு மசோதாவில் எந்த சூழலிலும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர் என் ரவி பேசி வருகிறார். அவருடைய பேச்சை விடுதலை சிறுத் தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கி றது. நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தமிழகம் முழுவதும் கல்வி நிறு வனங்களில் உள்ள சாதி, மத வெறுப்பு அரசியல் குறித்து விரிவான ஆய்வு அறிக்கை அளிக்க நீதிபதி சந்துரு தலை மையிலான விசாரணை ஆணையத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அர சைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் மும்பையில் இந்தியா கூட்டணி கலந் தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் பங்கேற்கிறேன். இந்தியா கூட் டணி உருவான பிறகு மோடி உள்ளிட்ட பாஜகவினர் பதற்றத்துடன் இருக்கிறார் கள்.
நாடாளுமன்றத்திலும் வட மாநி லங்களிலும் திமுக மற்றும் அதன் தலைமை குறித்து பாஜகவினர் கடுமை யாக சாடி பேசுகிறார்கள். இந்தியா கூட்டணியை உருவாக்க முன் முயற்சி எடுத்த திமுகவை பிரதமர் மோடியால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. இந்தியா கூட்டணி பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருக்கி றது. 2024 மக்களவைத் தேர்தலில் நாடாளு மன்றத்தில் இருந்து பாஜக தூக்கி எறி யப்படும். மணிப்பூர் சம்பவத்தில் உரிய விளக்கம் அளிக்காத பிரதமர் மோடி, மத அடிப்படையிலான பிளவு அரசியல் மூலம் மற்ற மாநிலங்களில் ஆதாயம் தேட பார்க்கிறார். நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக மீது அரசியல் காழ்ப் புணர்ச்சி யோடு பாஜக அரசியல் செய்கிறது. எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதி முக கூட வேண்டாம் என்று தான் சொல்கி றது. உண்மைக்கு மாறான தகவலை பரப்பு வது பாஜகவின் வழக்கமான கலாச்சாரம், இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மை யாக கண்டிக்கிறது.