திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரிய மங்கலம் பகுதியை போதையில்லா பகுதியாக உருவாக்க முயன்ற வாலி பர் சங்க கிளைச் செயலாளர் தவ்பிக்கை, அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பாஜகவைச் சேர்ந்த வினோத் மற்றும் கூட்டாளிகள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தோழர் தவ்பிக் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட அரியமங்கலம் பகுதி அம்மாகுளம் கிளைச் செயலாளர் தவ்பிக் (24). இவர் இப்பகுதியில் போதை இல்லா கலாச் சாரத்தை உருவாக்குவதற்காக போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரங்களில் தீவிர மாக ஈடுபட்டு வந்தார். மேலும் கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர் களுக்கு அறிவுரை கூறிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, அப்பகுதியில் சமூக விரோத செயலில் ஈடுபடும் பாஜகவைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட சுமார் 15 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தவ்பிக்கை சுற்றிவளைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் தலை உள்பட முதுகு, கை என உடலில் 10 இடங்களில் கொடூரமாக வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய தவ்பிக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவலறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், செயலாளர் சேதுபதி, பொரு ளாளர் நவநீதகிருஷ்ணன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், வெற்றிச்செல்வன், ரேணுகா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று தவ்பிக்கிற்கு ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர்களிடம் தவ்பிக் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில், தவ்பிக் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்ற வாளிகள் குறித்து அரியமங்கலம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததுடன், குற்றவாளிகள் மற்றும் அவர்களது வீடுகளை நேரில் வந்து அடையாளம் காட்ட சொன்ன அரியமங்கலம் காவல்துறையினரை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு வியாழனன்று நள்ளிரவு மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தவ்பிக் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மீண்டும் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் குற்ற வாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தனர். குற்றவாளி கள் கைது செய்யப்படவில்லை என்றால் வெள்ளியன்று அரியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனைதொடர்ந்து வெள்ளிக்கிழ மை காலை அரியமங்கலம் பகுதியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் லெனின், செயலாளர் சேதுபதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் மற்றும் சிபிஎம் கட்சியினர், மாதர் சங்கம், சிஐடியு மற்றும் தோழமை சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் பேசுகையில், ‘‘திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் கஞ்சா மிக எளிதாக கிடைக்கின்றது. கஞ்சா விற்கு இப்பகுதி சிறுவர்களை அடிமை யாக்கும் நோக்கத்தோடு சில சமூக விரோதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் அரியமங்கலம் காவல்நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமூகவிரோத செயலை தவ்பிக் கண்டித்ததால் அவரை கொலை செய்யும் எண்ணத்தோடு கொடூரமான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். எனவே இதில் சம்பந்தப்பட்ட அனை வர் மீதும் கஞ்சா, கொலை முயற்சி மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்’’ என்றனர். காவல் உதவி ஆணையர் காம ராஜ் கூறுகையில், ‘‘குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. வியாழனன்று இரவு மணிகண்டன்(18), ரெங்கநாதன் (18), சந்தோஷ்குமார் (20), பாலாஜி (20) ஆகிய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடு பட்ட மற்ற அனைத்து குற்றவாளி களும் விரைவில் கைது செய்யப் படுவர் என உறுதியளித்தார். இதனையடுத்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
வாலிபர் சங்கம் கண்டனம்
இதுதொடர்பாக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் லெனின், பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில், ‘‘திருச்சி மாநக ரம், அரியமங்கலம் காவல்நிலை யத்திற்குட்பட்ட அம்மாகுளம் பகு தியை சுற்றியுள்ள தெருக்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதில் வினோத்ராஜ் என்பவர் முக்கிய புள்ளியாகவும், பாதுஷா உள்ளிட்ட மற்றும் இளம்சிறார்கள் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு தெரிந்தும் இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இளம்சிறார்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகும் சூழலும், சமூகசீர்கேடுகளும் அதிகரித்து வருவதை தடுத்திட மேற்படி நபர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளார். வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் லெனின் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் அம்மா குளம் கிளைச் செயலாளர் தவ்பிக்கை வியாழனன்று அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோத கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு, இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவைச் சேர்ந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் அரி வாளுடன் வந்து தோழர் தவ்பிக் அவர்களை சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கத்தில் உடலில் 10 இடங்களிலும் தலை யிலும் கொடூரமாக வெட்டி யுள்ளார். படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வரும் தவ்பிக், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியமங்கலம் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்யும் வேலையை செய்து வந்ததாகவும் அரியமங்கலம் காவல்துறையினரிடம் நெருக்க மான உறவோடு இருப்பதாகவும் தெரிகிறது. படுகாயப்படுத்தப்பட்ட தோழர் தவ்பிக், போதை பழக்கத்திற்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். கடந்த மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று ரத்த தான முகாமை மிகச் சிறப்பாக நடத்தினார். மேலும் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி இளைஞர்கள் இரத்த தானம் செய்தார்கள். இது போன்ற பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பொறுக்காத பாஜகவைச் சேர்ந்த வினோத் ஏவிய சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது. எனவே காவல்துறை உடனடி யாக சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்ய வேண்டும். மக்கள் சேவையில் ஈடுபட்டுவந்த தோழர் தவ்பிக் அவர்களுக்கு தமிழக அரசு உரிய மேல் சிகிச்சை வழங்கிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.