அரியலூரில் ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழகத்தி லுள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஒரு லட்சம் பேர் கலந்து கொள் ளும் மறியல் போராட்டம் செப்டம்பர் 7 அன்று நடைபெறும். இதில் அரியலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நீட் தேர் வுக்கு விதிவிலக்கு கேட்டு நிர்ப்பந்தம் செய்யலாம். ஆனால் அது குறித்து எது வும் தெரிவிக்காதது ஏன்? மாநிலங்களில் மதக் கலவரத்தை உண்டாக்கி, மக்களை பிரித்து வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக நினைக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சி ஒரு நாளும் நடக் காது. அரசியல் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சுயசார்பு ஆகிய வற்றை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண் டும் என்பதே ‘இந்தியா’ அணியின் முக்கிய குறிக்கோளாகும். காவிரி பிரச்சனையில் ஒன்றிய அரசு தலையிட்டு, தமிழகத்துக்கு சேர வேண் டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா அர சுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.