28 மக்களவை தொகுதி களை கொண்ட கர் நாடக மாநிலத்தில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (ஜேடிஎஸ்) கூட் டணி அமைத்துள்ளது. பாஜக 24 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 4 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், சீட் தொடர்பான பிரச்சனை யால் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி யுள்ளது. 6 தொகுதிகளில்... முன்னாள் முதல்வர் எடி யூரப்பாவின் மகனும், கர் நாடக பாஜக தலைவரு மான விஜேந்திரா, ஷிவமோகா தொகுதியில் போட்டியிடப் போவதாக மேலிட அனுமதி யுடன் அறிவித்தார். ஆனால் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஷிவமோகாவில் போட்டி யிட சீட் கேட்டார். பாஜக மேலிடம் மறுக்கவே எடியூ ரப்பாவின் மகனை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு வதாக ஈஸ்வரப்பா அறிவித் தார். ஈஸ்வரப்பாவை சமா தானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் ஈஸ்வரப்பா அமித் ஷாவையே சந்திக்க மறுப்பு தெரிவித்து அவரை சந்திக்க நேரம் ஒதுக்காமல் துரத்தியுள்ளார். ஷிவமோகா போல சித்ர துர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமகளூரு, மைசூரு, தாவணகரே உள்ளிட்ட தொகுதிகளிலும் கோஷ்டி பூசலால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்ரதுர்கா தொகுதியில் ஒன்றிய அமைச்சராக இருந்த நாராயணசாமி, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளார்.
பெங்களூரு வடக்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடா வுக்கு வாய்ப்பு வழங்காமல் சோபா கரந்தலஜேவுக்கு வாய்ப்பு வழங்கியதால் சதானந்த கவுடா காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மேற் கொள்வது போன்ற பிம் பத்தை உருவாக்கி மோடி - அமித் ஷாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும் சிக்கமங்களூ ருவில் வாய்ப்பு மறுக்கப் பட்ட சி.டி.ரவியும், மைசூரு வில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் கட்சி யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி வித்து போர்க்கொடி தூக்கி யுள்ளனர். மேலும் ஜேடிஎஸ் கட் சிக்கு வழங்கப்பட்ட தொகுதி கள் தொடர்பாகவும் பாஜக கட்சிக்குள் பல்வேறு மோதல் கள் உருவாகியுள்ளன. இதனை “கோடி மீடியாக் கள்” மறைத்து வரும் நிலை யில், கர்நாடக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் அம் பலப்படுத்தியுள்ளன. வரவிருக் கும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் “கோடி மீடியா” ஊடகங்களை தவிர்த்து மற்ற கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் 20 தொகுதி களுக்கு மேல் கைப்பற்றும் என்றும், பாஜக 10 இடங் களை தொடுவது மிக சிரமம் என தகவல் வெளியாகியுள் ளது.