டிரம்ப் பற்றிய கேள்விக்கே அஞ்சி நடுங்கும் பாஜக அரசு
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பற்றி கேள்வி எழுப்பியதற்கே, ஒன்றிய பாஜக அரசு கை- கால் நடுங்குவது ஏன்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் காட்டமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப் பிட்டிருப்பதாவது: நான் நாடாளுமன்றத்தில் “பிரிக்ஸ்” நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்துள்ள இறக்குமதி வரி மிரட்டல் பற்றிய கேள்வி ஒன்றை (கேள்வி எண் 3518/21.03.2025) வெளி யுறவு அமைச்சரிடம் எழுப்பியி ருந்தேன். பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகி தம் இறக்குமதி வரி விதிப்போமென்ற அமெரிக்க ஜனாதிபதியின் மிரட்டல் குறித்த இந்திய அரசின் நிலை என்ன? எதிர் வரி விதிப்பு என்கிற நடவ டிக்கை மேற்கொள்ளுமா? அரசின் நட வடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? என்று கேட்டு இருந்தேன். இதற்கு பதில் அளித்த வெளி யுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்க ரெரிடா நான் எழுப்பிய கேள்விக்கு, எந்த பதிலும் இல்லாத ஒரு பதி லைத் தந்துள்ளார். “இந்தியா ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உருவாக்க உறுப்பினர், 20 ஆண்டு களாக இந்த அமைப்பு, உறுப்பினர் உள்ளடக்கத்திலும், அது கையா ளும் நிரல்களிலும் விரிந்து கொண்டே வந்துள்ளது. பிரிக்ஸ் செயல்பாடு கள் குறித்த புரிதலை சர்வதேச சமூ கத்திடம் கொண்டு செல்வது நமது கடமை” என்று பதிலளித்துள்ளார். இது என்ன பதில்? பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடு களைக் கொண்ட பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியாக அமெரிக்கா வால் மிரட்டப்படுவது பற்றிய இந்தி யாவின் நிலை என்ன என்ற கேள் விக்கு இந்த பதிலை அளித்திருக்கி றார்கள். பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடி மிரட் டல் விடுக்கும் அமெரிக்க அரசுக்கு நாடாளுமன்றக் கேள்விகளிலும் சாமரம் வீச வேண்டுமா? ‘இந்தியா, எதிர் வரி விதிப்பு என்ற முடிவை எடுக்குமா?’ என்ற கேள் விக்கான பதிலைப் பார்த்தால் “பசு மாட்டைப் பற்றி கட்டுரை கேட்டால், சிறுவன் ஏற்கெனவே படித்து மனனம் செய்து வைத்திருந்த தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி விட்டு அதன் கீழ் கட்டப்பட்டது தான் பசுமாடு” எழுதியிருந்த பதிலைப் போல, ஒரு பதிலைக் கொடுப்பது ஒன்றிய அமைச்சர் தானா, என யோசிக்க வேண்டியுள்ளது. ‘பிரிக்ஸ்’ செயல்பாடுகள் பற்றிய புரிதலை உருவாக்குவது இருக்கட் டும். இந்திய இறையாண்மையை ஏகா திபத்தியத்திற்கு இரையாக்காதீர்கள் அமைச்சரே! ஏற்றுமதி வரிக்கே இந்தப் பதி லெனில், அதை விதித்த எஜமான ரைப் பற்றி கேட்டால் என்னவா குமோ?. இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.