tamilnadu

மாநில அதிகாரத்தில் தலையிடும் பாஜக அரசு: கே.எஸ். அழகிரி கண்டனம்

சென்னை, டிச.23- தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநிலங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தில் தலையிட்டு அரசியல் செய்ய ஒன்றிய அரசு முயல்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசின் தேர்தல் சீர்திருத்த சட்டத் திருத்த மசோதா  வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்க ளின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற் கும் வழிவகுக்கும். பண பலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கி யதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம். தேர்தல் சட்டத் திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலு டன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. மக்களவையில் எந்த விவாதமும் நடத்தாமல் இதே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, புட்டாசாமி  வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி, வெகுஜன வாக்குரிமையைப் பறிக்க வழிவகுக்கும் என்ற முக்கிய அச்சமும் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.