tamilnadu

img

மண்ணெண்ணெய், கோதுமை அளவை குறைத்தது பாஜக அரசு

சென்னை,ஏப்.28- ஒன்றிய பாஜக அரசு தமிழ் நாட்டிற்கு வழங்கும் மண்ணெண் ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டு அளவினை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருவதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்  துறை அமைச்சர் அர. சக்கரபாணி  கடும் கண்டனத்தை தெரிவித்திருக் கிறார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:- தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது மாதம் ஒன்றிற்கு 2712 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு  கடிதம் எழுதியதற்கு தமிழ்நாட்டில் எரிவாயு இணைப்பு அதிகமாக இருப்ப தால் ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி பதில் கடிதம் எழுதியிருந்தார். மீண்டும் 29.3.2023 அன்று ஒன்றிய  அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர்  ஹர்தீப்சிங் பூரிக்கு கடிதம் எழுதி யுள்ளேன். அதற்குப் பதில் எதிர்நோக் கப்படுகிறது. 1996 - 2001 திமுக ஆட்சியின் போது  எரிவாயு இணைப்பு வழங்க கூட்டுறவு  வங்கிகள் மூலமாக கடன் வழங்கப் பட்டு மகளிர் பலர் பயனடைந்தனர். எரிவாயுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் களை கலைஞர் 2007 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் விலையில்லாமல் வழங்கினார். தமிழ்நாடு அரசின் சொந்த நிதியிலிருந்து எரிவாயு இணைப்புகள் வழங்கிடப்பட்டன. இதை ஊக்கப்படுத்துவதற்குப் பதி லாக மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு குறைத்துள்ளது வருத்தமளிக்கிறது. மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றாலும் ஒதுக்கீடு செய்வது ஒன்றிய அரசாக இருப்பதால் ஒதுக் கீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை வைக்க இயலும். தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று புதுதில்லி சென்று ஒன்றிய அமைச்சரை நேரில்  சந்தித்து தமிழ்நாட்டிற்கான மண் ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகப் படுத்த கோரிக்கை வைக்கப்படும். அதேபோன்று, கோதுமை ஒதுக் கீடும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜூலை 2020 வரை மாதம்தோறும் 3,485 மெ.டன் கோதுமை  ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இதுவும் தற்போது மாதம் ஒன்றிற்கு 8,532 மெ.டன் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி 23,532 மெட்ரிக் டன் வழங்க ஒன்றிய அரசிற்கு  கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சென்னையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டுக் குறைவால் பாதிக்கப் பட்ட ஒரு வீட்டிற்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் நேரில் ஆய்வுக்கு சென்றபோது, “பணம் கட்டி சிலிண்டர் வாங்கக்கூடிய வசதி வாய்ப்பு எங்களுக்கு இல்லை, மண் ணெண்ணெய் 3 லிட்டர் கொடுத்தாலும் போதும்” என்று சொல்லும் நிலை மைக்கு மக்கள் இன்றைக்கு வறுமை  கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகிறார் கள். ஆனால், ஒன்றிய அரசு அதை யெல்லாம் பார்க்காமல் ஒதுக்கீட்டைக்  குறைத்திருப்பது மிகவும் வருத்த மளிக்கிறது. மலைப்பகுதிகளில் அதிகம் பேர் மண்ணெண்ணெய் வைத்துதான் வாழ்க்கை நடத்து கிறார்கள். கொடைக்கானல், ஏற்காடு மலை, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவு வழங்க முடியாத நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, மண்ணெண்ணெய் தமிழ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருந் தால் பருப்பு, ஆயில், இப்போது சர்க்கரை எல்லாம் நாங்கள் வாங்குவது  போன்று, பொதுமக்களுக்கு எத்தனை லிட்டர் தேவையோ அத்தனை லிட்டர் கொடுப்பதற்கு நாங் கள் தயாராக இருக்கிறோம். இவை  அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்குப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதே நேரத்தில், மற்ற மாநிலங்க ளுக்கு எரிவாயு இணைப்பைக் கொடுக் கவில்லை. கொடுக்காத மாநிலத்திற்கு மண்ணெண்ணெய்  கூடுதலாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த  அளவில் இன்றைக்கு வஞ்சிக்கப் பட்டிருக்கிறது, குறைக்கப்பட்டிருக் கிறது. பொதுமக்கள் இதனால் பெரி தும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார் கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.