புனே, அக். 20- “இந்திய தேர்தல் ஆணையத்தின் வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணை, ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது என்பதை உறுதி செய்யும் பாஜகவின் சதி” என சிவசேனாவின் (உத்தவ்) மூத்த தலை வர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்பதை அமித் ஷாவுடன் அக்கட்சியும் ஏற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. அதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்)) ஆட்சி அமைப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான ஒரு உத்தி இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை மகா விகாஸ் அகாதி ஆட்சியமைக்க உரிமை கோர தவறினால் அடுத்த 6 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் பாஜக திட்ட மிட்டுள்ளது. இது மகா விகாஸ் அகாதி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பாஜக வின் செய்தித் தொடர்பாளர் போலவே உள்ளது. இது நியாயமற்றது” என அவர் கூறினார்.