tamilnadu

img

பாஜக கூட்டணி என்றால் கைது இல்லை!

தில்லி மதுபான கொள்கை வழக்குத் தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி  முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், பிஆர் எஸ் தலைவர் கே.கவிதா உள்ளிட்ட 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால் இதே மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய தெலுங்குதேச தலைவர் மகுண்டா ஸ்ரீநிவாசுலு எம்பி மற்றும் அவரது மகன் ராகவா மகுண்டா மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இருவரும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல்  பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  முன்பு மகுண்டா ஸ்ரீநிவாசுலு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அப்பொழுது அவருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர் சம்மனை அனுப்பி வந்தது.  இதையடுத்து மகுண்டா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி தெலுங்கு தேசத்தில் இணைந்தார். ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  இந்த 2 தேர்தல்களிலும் தெலுங்கு தேசம் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.  தங்களது கூட்டணி கட்சி என்பதால் மகுண்டா ஸ்ரீநிவாசுலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமலாக்கத்துறை க்கு மோடி அரசு அறிவுறுத்தியதன் பெயரிலேயே அவர் சிறைக்கு செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.