tamilnadu

பாஜக-வின் முருகன் மாநாடு ஒருநாள் கூத்து! அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்

பாஜக-வின் முருகன் மாநாடு ஒருநாள் கூத்து! அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்

சென்னை, ஜூன் 23 - சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “மதுரையில் நடைபெற்ற பாஜகவின் முருகன் மாநாட்டை விமர்சித்து கடு மையான கருத்து தெரிவித்தார்.  மேலும், “அண்ணாமலைக்கு செல்வாக்கு உள்ளதா? நயி னார் நாகேந்திரனுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று பாஜக வில் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்காக நடந்த மாநாடு தான் முருகன் மாநாடு” என்றும் அவர் தெரிவித்தார். “மதுரையில் நடந்த மாநாடு, முருகன் பக்தர்களுக்கான மாநாடு அல்ல; அது அரசியல் மாநாடு. அது ஒருநாள் கூத்து. கூடிக் கலைந்த மேகக் கூட்டங்கள் போல கலைந்த மாநாடு அது”  எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கும் பவன் கல்யா ணுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்ட  வேண்டும் என்றும் சவால் விட்டார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சியில் இதுவரை 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு  நடந்துள்ளதாகவும், 126 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடை பெறுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.