tamilnadu

img

பரணி வித்யாலயா மாவட்டத்தில் முதலிடம்

பரணி வித்யாலயா மாவட்டத்தில் முதலிடம்

கரூர், மே 16 - சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அகில இந்திய பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சர்வேஷ் 496 மதிப்பெண் பெற்று கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு, சமூக அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். தன்யா 491 மதிப்பெண்ணுடன் தமிழ், அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்களில் 100 மதிப்பெண்ணும், கவின்கிஷோர் 491 மதிப்பெண்ணும், செல்ஷியா கேத்ரின் 490 மதிப்பெண் மற்றும் தமிழில் முழு மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 50 மாணவர்களும் பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பில் பள்ளியின் சராசரி மதிப்பெண் 403. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முத்துப்பழனியப்பன் 486/500 பெற்று அறிவியல் பாடப்பிரிவில் கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். கோபிகா 485 மதிப்பெண் பெற்று, அறிவியல் பாடப்பிரிவில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் ஹர்ஷினி 486 மதிப்பெண் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார். அபிநிவேதா 483 மதிப்பெண்ணும், ஜெயப்பிரகாஷ் மற்றும் மயிலேஷ்வரன் 482 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். மேலும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும் பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பில் பள்ளியின் சராசரி மதிப்பெண் 404. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே சேர்வதற்கான இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.  ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் 6 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (NIT) சேர தகுதிப் பெற்றுள்ளனர். பரணி வித்யாலயா பள்ளி, குரோத் அகாடமி போட்டித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் பள்ளியிலேயே நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற, வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா, இருபால் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சாதனை புரிந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.