tamilnadu

img

சிந்தனைகள் செழிக்கும் இடமாகத் திகழ்வதால் ஜேஎன்யு ஆட்சியாளர்களால் குறிவைக்கப்படுகிறது

சீத்தாராம் யெச்சூரி நினைவு சொற்பொழிவில் பேரா.பிரபாத் பட்நாயக் பேச்சு

கல்வி வளாகங்கள் பல்வேறு கருத்துகள்/சிந்தனைகள் வளரும் இடமாக திகழ்கின்றன. அதனால் தான் ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகம் ஒன்றிய அரசாங் கத்தால் குறிவைக்கப்படுகிறது.  சிந்தனைகள் செழிக்கும் இட மாக கல்வி வளாகங்கள் திகழ்கின் றன. அவை பாசிச சிந்தனையை அழிப்பதாக இருப்பதால், அந்த வளாக வாழ்க்கையை அழிப்பது, பாசிசம் வாழ்வதற்கு முற்றிலும் அவசியமான ஒன்றாகிறது. அதனால்தான் ஜேஎன்யு ஒன்றிய அரசால் குறிவைக்கப்படுகிறது. ஒரு நாட்டின் அரசாங்கம் ஏன் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் மீது இவ்வளவு அக்கறை கொள்ள வேண்டும்? ஏனென்றால், இந்த பல்கலைக்கழகம் ஒன்றிய ஆட்சி யாளர்களுக்கு சவாலாக இருக்கி றது என்றார் மார்க்சியப் பொரு ளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வெள்ளியன்று நடந்த நிகழ்வில் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவுகளை பிரபாத் பட்நாயக் பகிர்ந்து கொண்டார்.

 இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக் குழு சார்பில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாள ரும், கம்யூனிஸ்ட் சிந்தனையாள ருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு சொற்பொழிவு நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, கடந்தாண்டு செப்டம்பரில் காலமானார். இவர், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலை வராக மூன்று முறை இருந்தார்.

 அவரது நினைவு சொற் பொழிவு நிகழ்வில், பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பேசுகையில், “மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டுமென யெச்சூரி வலியுறுத் தினார். நாம் நமது கல்லூரியின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது, அந்தப் போராட் டம் ஒரு மிகப்பெரிய போராட்டத்து டன் தொடர்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது, நீங்கள் மாணவர்களின் சிந்திக்கும் உரிமைக்கும், அவர் கள் நவீன தாராளமயத்திற்கு எதி ராக சிந்திப்பதற்காகவும் போராடு கிறீர்கள்.  மாணவர்களின் உரிமைகளுக் காகப் போராடுவது, ஒரு கட்டத்தில் அமைப்புக்கு எதிராக போராடு வதற்கான வழியாக உருவாகிறது.

ஆகவே நீங்கள் போராடுவதை கைவிட்டு விடாதீர்கள்; உங்கள் போராட்டம் அதிக முக்கியத்து வம் கொண்டது. இது நமக்குள் நடக்கும் சாதாரண போராட்டம் அல்ல; ஒட்டுமொத்த அமைப்புக் கும் எதிரான போராட்டமாகும்” என்றார். அவரது உரையை கேட்க மக்கள் தானாகவே திரளுவர் தோழர் யெச்சூரியின் ஆளு மையை வடிவமைத்ததில் ஜேஎன்யுவின் பங்கு குறித்து மாணவர் சங்க துணைத் தலைவர் நித்தீஷ் நாராயணன் பேசினார். அப்போது அவர், “பொதுக் கூட்டங் களில் தோழர் யெச்சூரி உரையாற் றும் போது, மக்களை திரட்டுவதற் கான தேவை இருக்காது.

ஏனெ னில், அவரது உரையைக் கேட்பதற் காக மக்கள் தானாகவே திரளுவர். அவரது உரையை கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. போராட்டங்களை நடத்துவ தற்கான நம்பிக்கையை அளித்து, சிறந்த உலகை உருவாக்கு வதற்காக இடதுசாரிகளுடன் இணைந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவரது வழியை நாங்கள் கட்டாயம் பின்தொடருவோம்” என்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற தோழர் யெச்சூரியின் குடும்பத்தினருக்கு, ‘மாணவர் போராட்டம்’ என்ற நூல் நினைவுப் பரிசாக வழங் கப்பட்டது. இந்த நிகழ்வில், தோழர் யெச்சூரியின் மனைவியும் பத்திரிகையாளருமான சீமா சிஷ்டி பங்கேற்றார்.