tamilnadu

img

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் நீர்வரத்து அதிகமானதால் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் அதிக அளவில் வருகிறது. இதனால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம்  தடை விதித்துள்ளது.  இதனால் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.