tamilnadu

img

நீதிமன்ற வளாகங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள்

திருச்சிராப்பள்ளி, ஆக. 26 - அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AILU) பெண் வழக்க றிஞர்கள் சிறப்பு மாநாடு திருச்சிராப் பள்ளியில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு பாண்டீஸ்வரி, சமந்தா, தமயந்தி, ஜூலியட் மெர்லின்ரூத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சம்கிராஜ் மாநாட்டுக் கொடியை ஏற்றினார்.  தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மாநில செயல் தலைவர் கோதண்டம் தலைமை உரை யாற்றினார். மாநில பொதுச்செயலா ளர் சிவக்குமார் துவக்கவுரையாற்றி னார். எழுத்தாளரும் ‘செம்மலர்’ ஆசிரி யருமான ச.தமிழ்ச்செல்வன், சென்னை ஐஐடி சமூகவியல் துறை இணைப் பேராசிரியர் கல்பனா கரு ணாகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  நீதிமன்ற வளாகங்களில் பெண்க ளுக்கு தனி கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்; பெண் வழக்கறிஞர்களு க்கு தனி ஓய்வறை மற்றும் பெண் வழக்கறிஞர் அறைகள் அமைக்க வேண்டும்; நாட்டுடமை வங்கிகளில் பெண் வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் தொழில் துவங்கிட கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  சங்கத்தின் மாநில துணைத்தலை வர் இளங்கோ நிறைவுரையாற்றினார்.  முன்னதாக திருச்சி மாவட்டச் செய லாளர் ரங்கராஜன் வரவேற்றார். பெண்கள் உபகுழு ஒருங்கிணைப்பா ளர் மெர்ஸி நன்றி கூறினார்.