tamilnadu

img

வங்கி தனியார்மயத்தைக் கண்டித்து ஏப். 4 இல் நாடாளுமன்றம் முன் தர்ணா

சென்னை, மார்ச் 24- வங்கி தனியார்மயத்தைக் கண்டித்து ஏப்ரல் 4 அன்று  நாடாளுமன்றம் முன்பு  தர்ணா போராட்டம் நடைபெற உள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெ ஃபி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் சம்மேள னத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் தேபாஷிஸ் பாசு சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வங்கித்துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. வங்கித்துறை யின் மொத்த வைப்புத் தொகை, கடன் தொகை, லாபம் ஆகியவை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய வளர்ச்சிக்கு பின்பலமாக இருக்கக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வங்கியின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதனுடைய பணிச்சுமையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைப்புத் தொகை பெறுவது மற்றும் கடன் வழங்குவது என்ற அடிப்படை சேவைகளை கடந்து தற்போது வங்கிச் சேவை பன்முகப்பட்டதாக பரவி வருகிறது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கு வது, அதன் பரிவர்த்தனைகளை தொடர்ந்து  கண்காணிப்பது, காப்பீடு மற்றும் டிமேட் கணக்குகளை பராமரிப்பது, ஏடிஎம் இயந்திரம் மற்றும் அதன் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது என்று பல கூடுதல் பணிகளை தற்போது வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் செய்து வருகின்றனர். அரசு வங்கிகள் மட்டுமே சாமானிய மக்களுக்கான வங்கிச் சேவையை அளித்து வருகிறது. இதன் காரணமாகவும், கூடுதல் பணி களுக்கு தேவையான ஊழியர்கள் இல்லாத தால் வங்கி வாடிக்கையாளர்களும், ஊழி யர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். பல கிளைகளில் ஒரே ஊழியரே அனைத்து வேலை களையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் வாடிக்கை யாளர்களுக்கு குறித்த நேரத்தில் உரிய சேவைகளை வழங்க முடியவில்லை.

மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது. இலக்கை எட்டாத அதிகாரிகள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படு கிறார்கள். செயலி மூலமும், தொலைபேசி மூல மும் வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்தறி தல் என்ற பெயரில் தொடர்ந்து வங்கிப் பணி யாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். குறித்த நேரத்திற்குள் அவர்களுடைய பணியை முடிக்க இயலாமல் அவர்களது அன்றாட வேலை நேரம் நீட்டிக்கப்படுகிறது. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய கட்டாயப்படுத்துவதால் மன உளைச்ச லுக்கு ஆளாகின்றனர்.  உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மருத்துவ அவசரத்திற்கும், குடும்பத் தேவைகளுக்கும் கூட விடுமுறை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர். இதன்  காரணமாக சில அதிகாரிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வங்கி நிர்வாகங்கள் தேவைக்கேற்ப பணியாளர்களை நியமித்து இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பல வங்கிப் பணிகளை தற்காலிக ஊழியர்களை நிய மித்து சமாளிக்கிறார்கள். பல ஆண்டுகள் பணி புரிந்த அந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்வதில்லை. அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கூலி, போனஸ் கூட அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை, எந்த பணிப் பாதுகாப்பும் இல்லை.

வங்கிகளில் போதிய ஆட்களை நியமித்து,  தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்து  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வங்கி நிர்வாகங்களும், அரசும் தயாராக இல்லை. பொதுத்துறை, கூட்டுறவு, கிராமிய வங்கிகள் என ஒட்டு மொத்த வங்கித் துறையையே தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. வங்கிகளில் தேவைக்கேற்ப பணியாளர் களை நியமித்து வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை வழங்குவதை உத்தரவாதப் படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொதுத்துறை, கிராம, கூட்டுறவு வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், வங்கிகளில் வெளிப் பணியாளர்களை நியமிக்கும் முறையையும், அவுட் சோர்சிங் முறையையும் கைவிட வேண்டும், கூட்டுறவுத் துறை மீதான தாக்கு தலை கைவிட வேண்டும், கிராம மக்க ளுக்கு பெரும் சேவையாற்றி வரும் கிராம வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் வரும் ஏப்ரல் 4 அன்று புது தில்லியில் நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது ஆலோசகர் வி.ராஜகோபாலன் நாயர், அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், தமிழ்நாடு தலைவர் எஸ்.சுனில்குமார், பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.