ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் தேரோட்டம்
அறந்தாங்கி, ஜுன் 29- ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு இரண்டு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனித்திருமஞ்சன விழா, கடந்த ஜுன் 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மாணிக்கவாசகர் தேரில் எழுந்தருள, தேரோட்டம் நான்கு வீதி வழியாக நடைபெற்றது. ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.