tamilnadu

img

மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை  கைவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 20-  தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 40,000 ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விடுபட்ட பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன், வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத் தலைவர்கள் எஸ்.கே. செல்வராஜ், கண்ணன், கோட்டச் செயலாளர்கள் நகரிய ராதா, லால்குடி செல்வம், ஸ்ரீரங்கம் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.  இதில் கோட்டத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். துறையூர் கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  திருவாரூர் திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) திருவாரூர் திட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்றனர். 62,000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குமார், துரைராஜ், ஜெயச்சந்திரன், முரளிதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, மாவட்ட தலைவர் அனிபா, பொருளாளர் கஜேந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டச் செயலாளர் ராஜேந்திரன், கோட்டச் செயலாளர் வீரபாண்டியன், வினோத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சிஐடியு கிளை சார்பாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக வியாழன் மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். டி.குமார், கே.துரைராஜ், எஸ்.ஜெயச்சந்திரன், கே.முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, மாவட்ட தலைவர் எம்.கே.என். அனிபா, திட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்,  சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.கஜேந்திரன், திட்ட பொருளாளர் ஜி.ஆர். முகேஷ் மற்றும் திருவாரூர், மன்னை கோட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். 62 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கரூர்  மின் நுகர்வோரை  பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விடுபட்ட பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் நடுமாறன், பொறியாளர் அமைப்பு மாவட்டத் தலைவர் ஒ. சரவணகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் செல்லமுத்து, நாகராஜ், விஜயகுமார், ரதி, மேகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.