tamilnadu

img

கிண்டி மருத்துவமனையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல்

சென்னை,நவ.13- சென்னை கிண்டியில் உள்ள  கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்  கத்தி யால் குத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில்  புதன் கிழமை வழக்கம்போல் நோயாளி கள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி யிடம் மருத்துவமனைக்கு வந்தவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜி யை குத்தினார். கழுத்து, தலை என பல இடங்களில் குத்தப்பட்ட மருத்து வர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவரை கத்தியால் குத்திய  விக்னேஷ் என்பவரை காவல்துறை யினர் கைது செய்தனர்.

துணை முதல்வர் விரைவு

இதனிடையே மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்தவுடன் உடனே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தி யாளர்களிடம் பேசுகையில் “தாக்குதலில் காயமடைந்த மருத்து வர் பாலாஜி ஜெகநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு மருத்துவக் கண்காணிப்பில் நல முடன் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் நினை வுக்குத் திரும்பிவிடுவார். இச்சம்ப வம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். எனவே, இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது இந்த அரசு. மருத்து வர்களுக்கு தேவையான பாதுகாப்பி னை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதி யாக இருக்கிறார். எனவே சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக் கிறோம் என்றார். அப்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்ட அறி விப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் அறி வுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனை த்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின ருடன்  பேச்சு நடத்தவுள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞர் விக் னேஷ் இந்த மருத்துவமனைக்கு தனது தாயாரை அழைத்துக் கொண்டு 6 மாதங்களாக சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அதனால் யாருக்கும் அவர் மீது எந்த சந்தேக மும் ஏற்படவில்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்ப வங்கள் நிகழாத வகையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.   இவ்வாறு அவர் கூறினார். போராட்டம் வாபஸ் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்தும் நட வடிக்கை எடுக்கக் கோரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் போரா ட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை யடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.  மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மருத்துவர் தாக்கப்பட்டதற்கு  கண்டனம்

மருத்துவர் தாக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்விற்கான மருத் துவர் அரங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர்  காசி விடுத்துள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவரை, “நோயாளிக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை” எனக்கூறி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவர் அரங்கம் வன்மையாகக் கண்டனத்தை தெரிவிக்கிறது. மேலும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் அரங்கம் கோருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் ஊழியர்கள் போதிய அளவில் இல்லாததும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களாகும். மேலும் அடிக்கடி அரசு மருத்துவர்களை குறைகூறி - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரே, ‘நடவடிக்கை’ என்ற பெயரில் அச்சுறுத்துவதும், ஊடகங்களில் பேசுவதும், பொது மக்களிடையே மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மீது சந்தேகம் ஏற்படவும் இது வழிவகுக்கிறது.  இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க, பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், காலிப்பணியிடங்களை நிரந்தர மருத்து வர்களையும், ஊழியர்களையும், கொண்டு நிரப்ப வேண்டும் எனவும், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நட வடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செவிலியர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு எம்.ஆர்‌.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் விடுத்துள்ள அறிக்கை யில், சமீப காலமாக மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.  இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மருத்துவ துறையில் பணி செய்யும்  ஊழியர்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தமிழ்நாடு அரசு தகுந்த சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அரசு ஊழியர் சங்கம்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்(பொ.) சா. டேனியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் மீதான கொலைவெறித் தாக்கு தலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.