tamilnadu

மதுரை கோட்டத்தில் 2,800 பேருந்துகள் ஓடத் தயார்

மதுரை, மே 16- தமிழகம் முழுவதும் திங்கட் கிழமை முதல் 50 சதவீத பயணி களுடன் பேருந்துகள் இயக்கப் படுமென அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுரைக்கோட்டத்தில் மதுரையில் உள்ள 1,200 பேருந்து கள், திண்டுக்கல்லில் 1000 பேருந் துகள், விருதுநகரில் 600 பேருந்து கள் என மொத்தம் 2,800 அரசுப் பேருந்துகள் ஓடுவதற்கு தயார் நிலையில் உள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து களில் பேட்டரிகளை மாற்றும் பணி, டயர்களில் காற்றை நிரப்பி தயார் படுத்தும் பணிகள் நடை பெற்றுள்ளன. மற்றபடி இந்தக் காலத்தில் பேருந்துகளுக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்கி பேருந்துகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பேருந்துகளில் 50 சத வீத பயணிகளே ஏற்றப்பட உள்ள னர். பேருந்துக்கு கிருமி நாசினி அடிப்பது, ஓட்டுநர், நடத்துநர் முகக்கவசங்கள் அணிவது உறு திப்படுத்தப்பட்டுள்ளது.

பயணி களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனக் கூறப் பட்டுள்ளது. தினம்தோறும் பேருந்து ஓட்டு நர், நடத்துநர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அதே நேரத் தில் பேருந்து நிறுத்தங்களில் ஏறும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படுமா? என்பது தெரிய வில்லை. தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக்கழகம் பேருந்தை ஓட் டும்பட்சத்தில் அது சவால் நிறைந்த பணியாகவே கருதப்படும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு தொழிலாளர்களும் பேருந்தை இயக்கி மக்கள் சேவையாற்ற தயாராகி உள்ளனர். அதே நேரத்தில் எட்டு மணி நேர வேலை யை 12 நேரமாக மாற்ற முயற்சிக் கும் நடவடிக்கைக்கு அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற னர்.  

ஐம்பது சதவீத பயணிகளே பயணம் செய்ய அனுமதி என்ற நிலையில், மதுரையிலிருந்து மேலூருக்கு ஒரு பேருந்து இயக் கப்படுகிறது என வைத்துக் கொண்டால் மதுரையிலேயே மேலூருக்கு பயணம் செய்ய ஐம்பது சதவீத பயணிகள் ஏறி விட்டால். அந்தப் பேருந்தில் வேறு பயணிகளை ஏற்றவே முடி யாது. அப்படியென்றால் இடை யில் உள்ள பேருந்து நிறுத்தங் களில் நிற்கும் பயணிகள் என்ன செய்வர், ஒரு பேருந்து நிறுத்தத் தில் ஏறி மூன்றாவது நிறுத்தங்க ளில் இறங்கும் பயணிகள் என்ன செய்வர்? என்ற கேள்விகள் எழு கின்றன. இதுகுறித்து போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பேசிய போது, பேருந்தை முதலில் இயக்கு வது தான் எங்கள் நோக்கம். பேரு ந்து ஓடும் சூழல் முற்றிலும் புதி யது. அப்போது ஏற்படும் பிரச்ச னைகள் குறித்து பேசித்தான் தீர்வு காணமுடியும் என்றனர்.