கோவை, ஜன.18- கொரோனா முன்னெச்சரிக்கை நட வடிக்கையின் ஒருபகுதியாக கோவை விமான நிலையத்தில் 4,393 பேரிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட தில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடு களில் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இத னால், இந்திய நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் 2 சதவிகிதம் பயணிகளிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இதனிடையே கோவை விமான நிலையத்துக்கு ஷார் ஜாவிலிருந்து ஜன.16 ஆம் தேதி வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக் கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி யைச் சோ்ந்த 38 வயது வாலிபருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர, கோவை விமான நிலை யத்தில் ஜன.1 ஆம் தேதியிலிருந்து இது வரை எடுக்கப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறு கையில், கோவை விமான நிலையத்தில் கடந்த ஜன.1 ஆம் தேதியிலிருந்து இது வரை 4 ஆயிரத்து 393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 148 பேரிடமிருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளன. இவர்களில் கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங் களைச் சோ்ந்த தலா ஒருவர் வீதம் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பரி சோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் 3 பேர், சேலம், நாமக்கல் மற் றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என அருணா கூறியுள் ளார்.