tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

புதுக்கோட்டை, டிச.22- மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் மாவட்ட ஆட்சி யர் கவிதரா ராமு தலைமை யில் வியாழக்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து பெறப் பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வுகள் மேற்கொள்ள அலு வலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 15 பயனாளிகளுக்கு ரூ.1,50,000 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக 52  பயனாளிகளுக்கு ரூ.7,02,000 மதிப்பில் நவீன  செயற்கை கால், ஊன்று கோல், கைதாங்கி, முழங்கை தாங்கி, காலிபர், கற்றல் உபகரணங்கள் மற் றும் தொழுநோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு கை பேசி, சிறப்பு உபகரணங்கள் என மொத்தம் 67 பய னாளிகளுக்கு ரூ.8,52,000 மதிப்பீட்டில் உதவி உபகர ணங்களை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார்.  இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, தனித் துணை ஆட்சி யர் (சமூக பாதுகாப்புத்  திட்டம்) பா.சரவணன், மாவ ட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலக நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.