மதுரை, நவ. 20- அகில இந்திய அங்கன்வாடி ஊழி யர்கள்- உதவியாளர்கள் சங்கத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு நிதி யளிப்பு டிசம்பர் - 6 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மதுரையில் நடை பெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக நிதியளிப்பு நிகழ்வு மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ரத்தினமாலா, பொதுச் செய லாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ். தேவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட ரூ.29 லட்சத்தை முதல் தவணையாக ஊழியர்கள் வழங்கினர். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ், செய லாளர் இரா.லெனின், பொருளாளர் ஜெ.லூர்துரூபி, புறநகர் மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், செயலாளர் ஆர்.அரவிந்தன் பொருளாளர் ஜி. கௌரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.