tamilnadu

img

சட்டப்பேரவை நிகழ்வுகள் படிப்படியாக நேரலை

சென்னை,ஜூன் 20- சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நட வடிக்கை எடுக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வு களை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி தலைவர்  ஜெகதீஸ் வரன் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தார்.  2022 ஜனவரி 6 ஆம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் கவன ஈர்ப்பு  தீர்மானங்கள், முக்கிய தீர்மானங் களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, அன்றைய தினம் நடந்த பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து  சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப் படுகிறது.

அதில் முக்கிய தலை வர்கள், எதிர்க்கட்சி உள்ளிட்ட உறுப்பி னர்களின் உரைகளும் இடம்பெற்றுள் ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பேரவைத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக கொறடா வேலுமணி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “அரசியல் சாசன அமைப்பு சட்டத்தின்படி இந்த விவகாரத்தில், நீதிமன்றம் தலையிட முடியாது. மக்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாது. அது குறித்து பேரவைத்தலைவர்தான் முடி வெடுக்க வேண்டும். பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளி பரப்பு செய்ய வேண்டுமென விஜய காந்த் தாக்கல் செய்துள்ள வழக்கில் 8 வருடங்கள் கழித்து தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென எஸ்.பி.வேலுமணி கோரி யுள்ளார். எனவே அவரது மனுவை ஏற்கக்கூடாது”என்றும் வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.