சென்னை, ஜன. 27- ஒன்றிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷா திட்ட ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் வெள்ளியன்று (ஜன. 27) நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி.டெய்சி தலைமை தாங்கி னார். சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். சங்கத் தின் மாநில பொதுச்செய லாளர் ஆர்.சீதாலட்சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆஷா ஊழியர்களின் பணியை நிரந்தரப்படுத்தி, மாத ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்தவர்க ளுக்கு கிராம சுகாதார செவிலியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், போக்கு வரத்துக்கான செலவினங் களை வழங்க வேண்டும், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதிக்குச் சென்றுவர ஆட்டோ கட்டணம் வழங்க வேண்டும், புதிய தரமான செல்போன்களை வழங்க வேண்டும், வெள்ளை நிற சீருடை வழங்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்களை நேரடியாகப் பார்வையிடும் நாட்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். ஊதி யத்தை பிடித்தம் செய்து வழங்கும் போக்கைக் கைவிட வேண்டும்,
உடல்நிலை பாதிக்கப் பட்டாலும் அதிகாரிகள் விடுப்பு அளிக்க மறுக்கும் போக்கைக் கைவிட வேண்டும், பணிக்கொடை தொகை, இறப்பு நிதி ரூ.5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ ஆகிய வற்றைச் செயல்படுத்தப்பட வேண்டும், கொரோனா பணி செய்த ஆஷா ஊழி யர்களுக்கு ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், துணைத்தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீலகிரி மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், பீடி சங்கத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.பார்வதி, மாநில நிர்வாகி கள் கேசினி ரோஜா, தாமரைச்செல்வி, சுசிலா, செல்வி, புஷ்பகலா உள்ளிட்டு மாநிலம் முழுவதி லும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.