மதுரை:
தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்யக் கோரிய வழக்குக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த தவமணி தேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடைசியாக 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றது. இதில்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) கணக்கெடுப்பு தனியாக நடத்த பரிந்துரை செய்தும்தனி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுத்து தனியாக வரைமுறை செய்யப் படும்போது இட ஒதுக்கீடு சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் கணக்கெடுப்பு முறையாக இல்லாததால் இட ஒதுக்கீட்டில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. இதனால்தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் பரிந்துரையின் படி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் (OBC) பரிந்துரையைபரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுசெய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறும்போது 1992ல் உத்தரவு பிறப்பித்த நிலையில், ஓபிசி(OBC) குறித்து கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? கணக்கெடுப்பு நடத்தினால் தானேஒதுக்கீடு தொடர்பானவற்றை வழங்க இயலும்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.