tamilnadu

img

கரிசல்குயில் கிருஷ்ணசாமி உடலுக்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள் அஞ்சலி

கரிசல்குயில் கிருஷ்ணசாமி உடலுக்கு  கலைஞர்கள், எழுத்தாளர்கள் அஞ்சலி

 தமிழகம் அறிந்த மக்கள் இசைப் பாடகரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரு மான கரிசல்குயில் கிருஷ்ண சாமி ஏப்ரல் 11 அன்று கால மானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இராஜபாளையம் அருகே உள்ள நரிக்குளம் கிரா மத்தில் ஏப்ரல் 13 ஞாயி றன்று  நடைபெற்றது.  இந்நிகழ்வில் தமிழகம் முழுவதுமிருந்து பாடகர் கள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகள்,சிபிஎம் கட்சியி னர்.பொதுமக்கள் ஏராளமா னோர் திரண்டு, அஞ்சலி செலுத்தினர்.  இறுதி நிகழ்ச்சியில் பாடகர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு தமு எகச மாவட்டச் செயலாளர் அ.லட்சுமி காந்தன் தலை மை தாங்கினார்.  மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமுவேல் ராஜ், கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ் கரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் அ.குருசாமி, தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மூத்த தலைவர் ச.தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர் வெண் புறா, நாடகக் கலைஞர் பிரளயன், கவிஞர் கிருஷி, ம.மணிமாறன், எம்.இலட்சுமணப் பெருமாள் மற்றும் ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் கு.ஜக்கையன்,  அஞ்சல்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் இரங்கல் உரையாற்றினர்.