சென்னை, ஜன.11 - கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருது வழங்கும் விழா வெள்ளியன்று (ஜன.10) சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கலைஞர் மு.கரு ணாநிதி பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரா.அருணன் (உரைநடை), நெல்லை ஜெயந்தா (கவிதை), சுரேஷ் குமார் இந்திரஜித் (நாவல்), என்.ஸ்ரீராம் (சிறு கதைகள்), கலைராணி (நாடகம்), நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) ஆகியோ ருக்கு வழங்கினார். பபாசி விருதுகள் சிறந்த பதிப்பாளருக்கான பதிப் பகச் செம்மல் க.கணபதி விருது கற்பகம் புத்தகாலயத்திற்கும், சிறந்த நூலக ருக்கான விருது ஆர்.கோதண்டராம னுக்கும், சிறந்த புத்தக விற்பனையாள ருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்ய ப்பன் விருது பெல் கோ நிறுவனத்திற் கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக் கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளி யப்பா விருது எழுத்தாளர் ஜோதி சுந்தரேசனுக்கும், சிறந்த தமிழறிஞருக் கான பாரி செல்லப்பனார் விருது முனை வர் சபா.அருணாச்சலத்திற்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பேராசிரியர் பர்வீன் சுல்தானா விற்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது எழுத்தாளர் சங்கர சரவணனுக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது மணவை பொன்.மாணிக்கத்திற்கும், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது மரபின் மைந்தன் முத்தையாவிற்கும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பபாசி தலைவர் சேது சொக்க லிங்கம், செயலாளர் முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.