சென்னை, மார்ச் 5 தமிழகத்தில் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேத் ஆய்வகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் குமரன் மருத்துவமனை மற்றும் ரேலா இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து இதனை அறிமுகப்படுத்தி யுள்ளன. இந்த ஆய்வ கத்தை ரேலா மருத்துவ மனை தலைவர் பேராசிரி யர் முகமது ரேலா முன்னிலை யில் ரவி அப்பாசாமி மற்றும் டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பொருத் தப்பட்டுள்ள நவீன இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது, ரத்த நாளங்கள், மென்மையான திசுக்களின் செயல்பாடு களை கண்டறிய உதவும் என்று ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா கூறினார். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த கேத் ஆய்வகம், இதயம், ரத்த நாளம், புற்றுநோய் மற்றும் நரம்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க இது மருத்துவர்க ளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்த கருவியைக் கொண்டு முன்கூட்டியே பிரச்சினைகளை கண்டறி வதன் மூலம் பாதிப்பு ஏற்பட விருக்கும் நபர்களுக்கு அது வராமல் தடுக்கவும், அவர்களின் உடல் நலத்தை மேம்படுத்தி மருத்துவத்தின் மீதான நம்பிக்கையையும் இது அதிகரிக்கும். இந்த இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது முற்றிலும் தானியங்கியாக செயல்ப டும். இதை கைகளால் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக இதன்மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகத் துல்லிய மாக இருப்பதோடு பரிசோ தனைகளையும் வேகமாக செய்ய முடியும் என்று குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவா தெரிவித்துள்ளார்.