tamilnadu

img

பட்டியலின மக்களுக்கான குடிநீரில் கழிவைக் கலந்த கயவர்களை உடனே கைது செய்க!

புதுக்கோட்டை, ஜன.4   வேங்கைவயல் கிராமத்தில் பட்டி யலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த கயவர்களை உடன டியாக கைது செய்ய வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறை யூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டிய லின மக்கள் பயன்படுத்தும்குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்ப வம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியச் செயலா ளர் பி.சுகந்தி, மாநில பொதுச் செயலா ளர் ஏ.ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், “இந்த மனிதாபி மானமற்ற செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமையை கடைப் பிடித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு  செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையை யும் ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டு கிறது. அதே நேரத்தில் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடியவர்கள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் நீர்நிலைகளை சேதப்படுத்தியது அல் லது மாசுபடுத்தியதற்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3(1)(ஓ)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கும் ஏற்பாடு உள்ளது. மலம் கலக்கப்பட்ட குடிநீரை குடித்த அனைவருக்கும் இச்சட்ட பிரிவின்கீழ் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இந்நிலையில், அந்த கிராமத்தைச் சார்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த கிராமத்தில் மரு த்துவ முகாமை நடத்த மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அக்கிராமத்தில் பொது தண்ணீர் தொட்டியிலிருந்து, பழைய குழாய் இணைப்பின் வழியாகத்தான் இதுவரை குடிநீர் வழங்கப்படுகிறது. உடனடியாக புதிய குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். 1986  இல் கட்டப்பட்ட பட்டியலின மக்களின் வீடுகள் மிகக் கடுமையாக சேத மடைந்து குடியிருக்க தகுதி இல்லாத வைகளாக உள்ளன. எனவே தமிழக அரசு புதிய வீடுகளை கட்டித் தருவத ற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்படு கின்றன. இதற்கென்று மாவட்ட ஆட்சியர் உருவாக்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட தீண்டாமைப் புகார்கள் வந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் இதில்  உரிய தலையீடு செய்து தீண்டாமை யை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.   தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு ஆணையம் தன்னுடைய பணி யை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள தீண்டாமை பிரச்சனைகள் வெளியே வந்த பின்பு மட்டுமே அரசு தலை யிடுவது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட  நாட்களுக்கு ஒருமுறை ஆணையம்  கூட்டப்பட வேண்டும். பட்டியலின மக்க ளிடம் தீண்டாமை கொடுமைகள் குறி த்து கேட்டு அறிந்து தலையிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.