tamilnadu

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு

சென்னை,டிச.29- சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  ஒமைக்ரான் பரவக்கூடிய நிலையில் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வரு வதற்கு டிக்கெட் முன்பதிவு செய் திருந்தாலும் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறி உடையவர்கள் தரி சனத்துக்கு வரவேண்டாம். பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி  போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.ஆர். நெகடிவ் சான்றிதழ்  இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். திருப்பதி உள்ளூர் பக்தர்க ளுக்காக தினமும் 5 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 10 நாட்கள் 50 ஆயிரம்  டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதற்காக 5 கவுண்டர்கள் திறக்க ப்படுகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பல்வேறு ஊர்களில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை யில் நாள்தோறும் 30 ஆயிரம் லட்டுகள், கல்யாண உற்சவ லட்டுகள் 500-ம், வேலூ ரில் 5 ஆயிரம் லட்டுகளும், பெங்களூரில் 10 ஆயிரம் லட்டுகளும், ஐதராபாத்,  விசாகப்பட்டினத்திலும் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.