tamilnadu

img

எழுவர் விடுதலைக்கு ஏற்பாடு செய்க... குடியரசுத்தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்...

மதுரை:
முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளஎழுவர் விடுதலைக்கு ஏற்பாடுசெய்யக்கோரி  குடியரசுத்தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி படுகொலையில்  குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களதுவாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும் அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்யவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். 

இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம்வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டுவாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையைதொடர்ந்து கோரி வருகின்றன. ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும்  தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனையில் ஆளுநர்இவ் விவகாரத்தில் முடிவெடுக்க
லாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இந்த பிரச்சனையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலைசெய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கவேண்டும்; அந்த எழுவரும் மிகமிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.