திருநெல்வேலி .ஏப். 4- சேரன்மகாதேவியில் காவல்துறை அதிகாரி பல்பீர் சிங்கால் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பல்பீர் சிங்கின் அராஜகத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- காவல்துறை அதிகாரி பல்பீர் சிங்கின் அராஜகத்தை எதிர்த்து சேரன்மகாதேவியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் நிலையத்தில் அனுமதி கேட்டோம். எஸ்பி வரை சென்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இது குறித்து ஆர்ப் பாட்டம் நடந்த போது அங்குள்ள அனைத்து அச்சகங்களிலும் காவல் துறைக்கு எதிரான வால்போஸ்டர்கள் அடிக்க கூடாது என எச்சரித்துள்ள னர். காவல்துறையை கண்டித்து போஸ்டர் அடிக்க அனுமதி மறுக் கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கிற செயல். இதை சிபிஎம் கண்டிக்கிறது. காவல் அதிகாரி பல்பீர் சிங் இதுவரை 48 பேர்களின் பல்லை உடைத்து இருக் கிறார். இந்த 48 பேரின் முகவரியை தேடி நாங்கள் போனால் அங்கு அவர்கள் இல்லை என பதில் வரு கிறது. காவல்துறையால் அவர்கள் கடத்தப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. பல்பீர்சிங் செய்த சித்ரவதையை புதிய வகையான சித்ரவதையாக பார்க்கிறோம். ஜல்லி கற்களை வாயில் போட்டு இரண்டு கைகளா லும் கன்னத்தில் அடித்து கொடுமைப் படுத்தப்படும் நடவடிக்கை. சட்டப் படியாக அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால் காவல்துறை எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்பதற்கு இது முன்னுதாரணமாக மாறிவிடும். தமிழ்நாட்டில் 8க்கும் மேற்பட்ட லாக்கப் சாவுகள் நடந்துள்ளன. செங்கல்பட்டில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். பணியில் உள்ள நீதிபதிகள் மூலம் இதை விசா ரிக்க வேண்டும். தற்போது நடை பெற்று வரும் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம், நீதி வழங்க வேண்டும். பல்பீர் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றார்.