பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு
உலக மகளிர் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாநராட்சி பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மரம் நண்பர்கள், பேக்கரி மகராஜ், ராஜா கண்ஸ்ட்ரக்ஷன்ஸ், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு மருத்துவர் ச.ராம் தாஸ் தலைமை வகித்தார். அம்பிகா அறக்கட்டளை நிறுவனர் சந்திரா ரவீந்திரன், டீம் மருத்துவமனை இயக்குனர் கே.எச்.சலீம், மேனாள் ரோட்டரி ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், ரோட்டரி சங்கத் தலைவர் சிவசக்திவேல், மரம் நண்பர்கள் செயலர் ப.ராதாகிருஷ்ணன், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் இப்ரஹீம் பாபு, பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா, மாநகர நகர் நல அலுவலர் மரு.காயத்ரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மூத்த பெண் சுகாதாரப் பணியாளர் களுக்கு பொன்னாடை அணிவித்து கவு ரவிக்கப்பட்டது. 250 பெண் சுகாதாரப் பணி யாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. முன்னதாக விழா ஒருங்கிணைப் பாளர் சா.விஸ்வநாதன் வரவேற்க, ரியாஷ் கான் நன்றி கூறினார்.
மதுரையில் நூல் வெளியீட்டு விழா
மதுரை இந்திய ஜன நாயக வாலிபர் சங்க முன னாள் மாவட்டச் செயலாளர் ச.பன்னீர்செல்வம் எழுதிய அம்மத்தாக்களும் சீயா னும் நூல் வெளியீட்டு நிக ழ்ச்சி சனிக்கிழமை அன்று ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட் டில் உள்ள லயோலா வளாக கலையரங்கில் நடைபெற்றது. தமுஎகச மதுரை மாந கர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கார்மேகம் தலைமை வகித்தார். முனை வர் பாரதிகிருஷ்ணகுமார் நூலை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார். தமிழ் அறக் கட்டளை எம்.வி.இளங்கும ரன் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மாநகர் துணை மேயர் டி.நாகராஜன், எழுத்தாளர்கள் ஸ்ரீரசா, மதுரை நம்பி, சிஐடியு மாவட் டச் செயலாளர் இரா.லெனின், கவிஞர் மகாலெட்சுமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை பாண்டிய முத்துக்குமரன் தொகுத்து வழக்கினார். எழுத்தாளர் ச. பன்னீர் செல்வம் ஏற்புரை வழங்கினார். வி.ஹேமலெட்சுமி நன்றி கூறினார்.