tamilnadu

img

திருச்சியில் செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா

திருச்சியில் செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா

திருச்சி, ஜுன் 29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் நடைபெற்ற செந்தொண்டர் பேரணியில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற செந்தொண்டர்களுக்கு, திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் வெண்மணி இல்லத்தில் பாராட்டு விழா ஞாயிறன்று அன்று நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து செந்தொண்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.  பின்னர் நடந்த நிகழ்ச்சியில் “பாசிசம் ஒழித்த செஞ்சேனை”  என்ற தலைப்பில் செந்தொண்டர் அமைப்பு மாநிலத் தலைவர் பாலா மற்றும் “கம்யூனிஸ்ட் இயக்க சாதனை சரித்திரம்” என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், முத்துக்குமார், பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், பாலமுருகன், நாகராஜ், சுப்பிரமணி உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.  முன்னதாக, மாவட்டக்குழு உறுப்பினர் பாலகுமார் வரவேற்றார்.  வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சத்யராஜ் நன்றி கூறினார்.