tamilnadu

img

போடியிலிருந்து மதுரை, சென்னைக்கு ரயில் சேவை

தேனி, ஜூன் 15- 13 ஆண்டுகளுக்குப் பின் போடி -மதுரை,  போடி -சென்னை ரயில் சேவை தொடங்கி யதை முன்னிட்டு 10 ஆண்டுகளாக தொடர்  போராட்டம் நடத்திய பெரியகுளம் தொகுதி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர்  தலைமையிலான போடி -மதுரை அகல  ரயில்பாதை திட்ட அமலாக்கக் குழுவினர் களுக்கு போடி வர்த்தகர் சங்கம் ஒருங்கி ணைப்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா  நடைபெற்றது.  கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம்  தேதி மதுரை -போடி இடையிலான மீட்டர்  கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டு கிடப்பில்  போடப்பட்டது. பெரியகுளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர் தலை மையில் வர்த்தகர்கள் ,அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ,பொதுமக்கள் அடங்கிய  போராட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பு மாநாடு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தியும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்தும் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரயில்வே அமைச்சகம் திட்டத்  திற்கு மறு அனுமதி கொடுத்து படிப்படியாக  நிதி ஒதுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்ட பணிகள் சுமார் ரூ.560 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற நிலையில் வியாழக்கிழமை முதல் மதுரை மற்றும் சென்னைக்கு ரயில் சேவை துவங்கி யது.

மலர் தூவி ரயிலுக்கு வரவேற்பு 

மதுரை ,சென்னைக்கு செல்லக்கூடிய ரயில்கள் வியாழனன்று காலை போடி ரயில்  நிலையத்திற்கு வந்தடைந்தது. அமலாக்கக் குழு மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் ரயி லுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து, அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஓட்டுநர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

பாராட்டு விழா 

பின்னர் வர்த்தகர்கள் சங்க மண்டபத்தில்  நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு வர்த்த கர்கள் சங்க தலைவர் பி.வேல்முருகன் தலை மை வகித்தார் .துணைத்தலைவர் ஆர்.சண்முகம் வரவேற்று பேசினார் .கடந்த 10  ஆண்டுகளாக தொடர் இயக்கத்தில் பய ணித்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து  கௌரவிக்கப்பட்டது. அமலாக்கக்குழு தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், செயலாளர் பி.சி.ராஜேந்திரன், நிர் வாகிகள் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், பா. ராமமூர்த்தி, கே.சீனிவாசன், பி.கே.ஆர். விஜயகுமார், கே.ராஜப்பன், டி.வெங்க டேசன், எல்.ஆர்.சங்கரசுப்பு, கே.நவநீதன்,  நாகராஜன், சி.முனீஸ்வரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன் நன்றி கூறினார்.