திருச்சிராப்பள்ளி, ஜன.29- திருச்சி காட்டூர் பகுதி யை சேர்ந்த 33வயது பெண் மீது டிராக்டர் மோதி அவரின் வயிற்றில் ஏறியதால் வயிற்றின் குடற்பகுதிகள் சேதமடைந்தது. மேலும் இடுப்பு எலும்புகள் நொறுங்கின. ஆபத்தான நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இதில், அவரது வயிற்று பகுதியில் உள்ள குடல் மற்றும் பல உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதுகு தண்டுவடத்தில் எலும்புகள் நொறுங்கியும், இடது பக்க இடுப்பு எலும்பு முறிந்தும் இருந்தது. முதலில் வயிற்று பகுதி யில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, லேப் ரோட்டமி எனப்படும் திறந்த நிலையில் வயிற்று பகுதி வைக்கப்பட்டது. டிரக்ஸ்டமி செய்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். கல்லீரலில் ஏற்பட்ட ரத்தக்கசிவு சரி செய்யப் பட்டது. இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டது. பிளா ஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர் மிதுன் ராஜ் பரத் வயிற்றின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. நுரையீரல் சிறப்பு மருத்துவர் தமிழரசன் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை அளித்தார். முழு குணம் அடைந்த அந்த பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளு டன் கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு அனு பவம் வாய்ந்த மருத்துவர் கள் மற்றும் சிறந்த உள்கட்ட மைப்பு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது என திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை லேப்ராஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் முகமது மன்சூர் கூறினார்.