tamilnadu

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

சென்னை, டிச. 17- தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொ துத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும்போது இனி அனைவரும் தவறா மல் எழுந்து நிற்க வேண்டும். இதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை, பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு வாய்மொழி யில் சொந்த குரலொசையில் பாட  வேண்டும். 55 விநாடிகளில் முல்லைப் பாணி ராகத்தில் மூன்றம் நடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்றும், அன்னைத் தமிழின் பெருமையை  உலகறியச் செய்வதிலும், இளம் தலை முறையினருக்கு கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும் பங்காற்ற முடியும் என்பதால், தமிழ் நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக் கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு வது ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.