கும்பகோணம், அக்.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தை அடுத்த கோவிலாசேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாண வர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறையைச் சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கிச் சூடு போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கான பாராட்டு விழா கும்பகோ ணம் அன்னை கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் நடைபெற்றது. விழா விற்கு முதல்வர் முனைவர் சீ.பொ.மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் அன்வர் கபீர் வாழ்த்துரையாற்றி னார். குழுமத்தின் செயலாளர் ஹுமா யூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி, தலைமை செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், துணை முதல்வர்கள் சி.இளஞ்செழியன் மற்றும் க.ராஜா ஆகியோர் மாணவியை பாராட்டினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட னர்.