சென்னை, செப். 15- அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையிலுள்ள சிலைக்கு முதலமைச்சர் ஸ்டா லின் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா புதனன்று (செப்.15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதி லும் உள்ள அண்ணா சிலை களுக்கு மரியாதை செய்யப்பட்டு கிறது. மேலும் அண்ணாவின் உருவப்படங்களுக்கு தலை வர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை யில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் அங்கு அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரு டன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் சூளுரை
‘அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரிய மாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணா வின் 113ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!’ என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.