சென்னை, நவ. 19 - காலிப்பணியிடம் நிரப்பு தல், பணியிட மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 20 அன்று திட்ட இயக்குநர் அலு வலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்க த்தின் பொதுச்செயலாளர் டி.டெய்சி செவ்வாயன்று (நவ.19) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறு கையில், பதவி உயர்வு வழங்கும் முன்பு உள்ளூர் பணியிட மாறுதல், மாவட்ட அளவில் பணியிட மாறுதல், வாரிசு பணி வழங்கிய பிறகு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த அர சாணையை பல மாவட்டங் களில் செயல்படுத்த வில்லை. மேலும், அரசா ணைக்கு மாறாக அதி காரிகள் செயல்படுகின்ற னர். காலிப் பணியிடங்களை நிரப்பவும் மறுத்து வரு கின்றனர். 10 ஆண்டு பணி செய்த வர்களுக்கு மேற்பார்வை யாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், 30 ஆண்டுகள் பணி புரிந்தும் பதவி உயர்வு வழங்காமல் உள்ளனர். அமைச்சர் நடத் திய பேச்சுவார்த்தையில், மே மாதம் கோடை விடு முறை வழங்க ஒப்புக் கொண்டார். அதனையும் நிறைவேற்றவில்லை. 50 வருடமாக உள்ள அங்கன்வாடி திட்டத்தை யும், ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழி யர்களுக்கு காலமுறை ஊதி யம், முறையான ஓய்வூதி யம் தர வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, ஓய்வு பெறும்போது ஊழியருக்கு 10 லட்சம் ரூபாய், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாய் குடும்ப பாதுகாப்பு நிதியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புத னன்று (நவ.20) தரமணியில் உள்ள திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந் திரள் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார் கள். இவ்வாறு அவர் கூறி னார்.