tamilnadu

img

இறந்த பின்பும் நடித்த கலைஞன்

கருப்பையா

 மருத்துவர் தோழர் செல்வராஜ் நினைவு நூலகத் திறப்புவிழா 13.11.2022 அன்று காலை மதுரை பாண்டியன் நகர் முதல் தெருவில் மிகச் சிறப்பாக நடந்தது. செல்வராஜின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி நடந்த அந்த நிகழ்வில் தீக்கதிர் மேனாள் ஆசிரியர் வி.பரமேசுவரன் நூலகத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நினைவரங்கு நிகழ்வு நடைபெற்றது. நினைவரங்கில் மதுரை ராயப்பன், காயத்ரி, ஜீவாம்பிரிகா ஆகியோர் பாடல்கள் பாடினர்.  பூ.பாண்டியமுத்துக்குமார் தொகுத்த நினைவரங்கில் தமுஎகச மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் இளங்கோ கார்மேகம், மாநிலக்குழு உறுப்பினர் அ.ந.சாந்தாராம்,  தீக்கதிர் செய்தியாசிரியர் ப.முருகன், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பஷீர், பேராசிரியர்கள் ஆளவந்தான், திருஞானம், நாடகக்குழு உறுப்பினர்கள் ப.அம்பிகா, சரவணக்குமார், மூத்த தோழர் ஏ.சி.ஆனந்தன், மருத்துவர் சுப்பையா உள்ளிட்ட பலரும் உணர்ச்சிகரமாகத் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.  அதைத் தொடர்ந்து வி.பரமேசுவரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா ஆகியோர் உரையாற்றினர். சிபிஐ (எம்) மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் மேலூர் மாவேந்தன் கவிதை வாசித்தார். தோழர் சண்முகம், செல்வராஜ் இறுதியாகக் கலந்து கொண்ட நாடக நிகழ்வின் பத்திரிகைச் செய்தியைப் பிரேம் போட்டு, நூலகத்துக்கு வழங்கினார். செல்வராஜின் கல்லூரித் தோழரும் சக மருத்துவரு மான டாக்டர் சுப்பையா, மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் நடந்த போராட்ட நிகழ்வுகளை மிகுந்த நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். வி.பரமேசுவரன் செல்வராஜ் மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் துடிப்பான தலைவராக இருந்த காலத்தில் நடந்த போராட்ட நிகழ்வு ஒன்றினை மிக உணர்ச்சியோடு எடுத்துரைத்தார்.

செல்வராஜின் உற்ற தோழரும் மதுரை தமுஎகச மாநகர் மாவட்டச் செயலாளருமான ஸ்ரீரசா, செல்வராஜின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தத்தனேரி மயானத்தில் அவரது நாடக மாணவர்கள் செல்வராஜையும் ஒரு கதா பாத்திரமாக்கி அவரை இறுதி வரை நாடகக் கலைஞனாக வாழ வைத்த நிகழ்வை நெகிழ்வாகச் சித்தரித்தார். உலகின் எந்த நாடகக் கலைஞனுக்கும், நாடகாசிரிய னுக்கும் கிடைக்காத பெறும்பேறு இது என வர்ணித்தார். அதைத் தொடர்ந்து தமுஎகச மாநில மதிப்புறு தலைவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், “செல்வராஜின் நூல் சேகரிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. அவரது ஆழ்ந்த படிப்பறிவு, அதனை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வீதி நாடகத் தைத் தனது களமாகத் தேர்ந்தெடுத்தது, தொடர்ந்து இறுதி வரை அதில் தளராமல் பயணித்தது என அத்தனையும் பிரமிப்பூட்டுபவை. இந்த நினைவரங்கில் பலரும் உரை யாற்றிய போது அவரைப் பற்றிப் பகிர்ந்த கொண்ட நினைவுகளைத் தொகுத்து அதனை நூலாக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். நிறைவாக சாந்தி செல்வராஜ் நிகழ்த்திய நன்றியுரை யில், செல்வராஜ் பாடுபட்ட லட்சியங்கள் நிறைவேறத் தொடர்ந்து உழைப்போம் என்று உறுதி கூறினார்.  மருத்துவர்கள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர் கள், மாணவர்கள், தமுஎகசவினர், உறவினர்கள், பகுதி வாழ் பொதுமக்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மதுரை மாநகர் சிபிஐ (எம்) மாவட்டச் செயலாளர் மா. கணேசன், முன்னாள் செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்டோர் நூலகத்தை பார்வையிட்டனர். மதுரை மாநகர் தமுஎகச டாக்டர் செல்வராஜ் கிளையும், நரிமேடு கிளையும் இணைந்து நடத்திய இவ்விழா அருமையான பிரியாணி விருந்தோடு சிறப்பாக நிறைவுற்றது.