tamilnadu

img

அம்பேத்கர் பிறந்தநாள் இனி ‘சமத்துவ நாளாக’ கொண்டாடப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.13- அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி  ‘சமத்துவ நாளாக’க் கொண்டாடப் படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.13) கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்; சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூல மாக சமப்படுத்திய போராளி; ‘இருட்ட றையில் இருக்குதடா உலகம்; சாதி  இருக்கிறதென்போனும் இருக்கின் றானே’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல, சாதிக் கொடுமையால் இருண்ட உல கத்தைத் தன்னுடைய பரந்த அறி வால், ஞானத்தால் விடிய வைத்த விடி வெள்ளி அண்ணல் அம்பேத்கர். வேண்டாததை நீக்கிய சிற்பி;  வேண்டியதைச் சேர்த்த ஓவியர்; அறி வுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை; எதிர்காலத் திற்கு ஒளிவிளக்கு அது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத் துறையின் மாநில அள விலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் ‘சமூகநீதி நாளாக’அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும்.

முழு உருவச் சிலை

வி.சி.க. தலைவர் தொல். திருமா வளவன் கோரிக்கையை ஏற்று,  அண்ணல் அம்பேத்கர் மணிமண்ட பத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை  நிறுவப்படும். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான ஆ.ராசாவின் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் செம்பதிப்பாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.